தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஆறாம் அறிவு உள்ளதா என்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் (என்னை உட்பட ).
இரு கட்சிகள் நம்மை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு ஓட்டுபோடும் இயந்த்திரங்களைப் போல நடத்திஉள்ளன . நாமும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஆடு மாடுகளைப்போல் இருந்திருக்கிறோம்.
எடுத்துக்காட்டாக இந்த தேர்தல் நேரத்தில் இலங்கை தமிழர்களைப் பற்றிய கவலை அரசியல்வாதிகளுக்கு அதிகம் ஆகிவிட்டது.வழக்கம் போல தமிழனும் உணர்ச்சி வசப்பட ஆரம்பித்துவிட்டான் .
ஜெயலலிதா வின் "தனி ஈழ " நாடகமும் , கருணாநிதியின் " உண்ணாவிரத" நாடகமும் அரசியல் மேடைகளில் அரங்கேறியுள்ளன.இலங்கையில் கண்முன்னே நடக்கும் அந்த அரசாங்கத்தின் அட்டுழியங்களை கண்டும் ஒன்றும் செய்ய முடியாத பொம்மைகளாக இருக்கிறார்கள் .. இருக்கிறோம் !
ஜெயலலிதாவை விட ஆட்சியில் இருக்கும் கருணாநிதிக்கே பொறுப்பு அதிகம். ஒகேனக்கல் முதல் ராஜினாமா கடித நாடகம் வரை தமிழனுக்கு மிகப் பெரிய துரோகம் செய்தவராகிவிட்டார் .
இனிமேலும் இந்த இரு கட்சிகளுக்கும் மாறி மாறி வோட்டு போட்டுக் கொண்டிருந்தால் நம்மை விட ஒரு முட்டாள் இருக்கவே முடியாது.
பாரதி சொன்னதுதான் நியாபகத்துக்கு வருகிறது,
" நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் "
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment